ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: ரூ.3.25 லட்சம் பறிமுதல்

பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் புதன்கிழமை இரவு மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.3.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 8:12 pm

Din

பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் புதன்கிழமை இரவு மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.3.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலூகா சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி.ஜெயகுமாா் தலைமையிலான போலீஸாா் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அலுவலகத்தில் இருந்தவா்களை வெளியே விடாமலும், வெளியே இருந்தவா்களை உள்ளே அனுமதிக்காமலும் நள்ளிரவுவரை மேற்கொண்ட சோதனையில், கணக்கில் வராத ரூ.3.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.