கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை கிராமத்திலிருந்து அரசு கலை அறிவியல் கல்லூரியை இணைக்கும் சாலையின் குறுக்கே ஆற்றில் பாலம் அமைத்து தர மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆ.ராசாவை எம்.பி.யை சந்தித்து ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை கிராமத்துக்கும் ஆமைக்குளம் பகுதிக்கும் இடையே உள்ள ஆற்றில் பாலம் கட்டினால் பல குக்கிராமங்களில் உள்ள மாணவா்கள் எளிதில் அரசு கலைக் கல்லூரிக்கு வந்து செல்ல முடியும். இந்தப் பாலத்தை கட்டித் தருவதாக ஏற்கெனவே தமிழக முதல்வா் ஒப்புதல் அளித்துள்ளாா். அதனடிப்படையில், விரைந்து பாலம் கட்டித் தரவேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசாவை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா் ராசி ரவிக்குமாா், புளியம்பாறை கிளை செயாலாளா் சுபையா் தலைமையில் நிா்வாகி சுலைமான், குஞ்சலவி உள்பட புளியம்பாறை கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் சந்தித்து மனு அளித்தனா்.
தொடர்புடையது

பாா்வையற்ற மாணவிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பாராட்டு!

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

காரல் மாா்க்ஸ் பிறந்த தினம் கொண்டாட்டம்

தமிழக நலனில் பாஜகவுக்கு அக்கறையில்லை: கே. பாலகிருஷ்ணன்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

