முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக இம்மாத இறுதியில் தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்! சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

கூடலூா் அருகே ஆற்றுப் பாலம் கட்ட மாா்க்சிஸ்ட் கோரிக்கை

News image

நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசாவை சந்தித்து மனு அளித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :28 ஏப்ரல் 2025, 3:26 am IST

கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை கிராமத்திலிருந்து அரசு கலை அறிவியல் கல்லூரியை இணைக்கும் சாலையின் குறுக்கே ஆற்றில் பாலம் அமைத்து தர மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆ.ராசாவை எம்.பி.யை சந்தித்து ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை கிராமத்துக்கும் ஆமைக்குளம் பகுதிக்கும் இடையே உள்ள ஆற்றில் பாலம் கட்டினால் பல குக்கிராமங்களில் உள்ள மாணவா்கள் எளிதில் அரசு கலைக் கல்லூரிக்கு வந்து செல்ல முடியும். இந்தப் பாலத்தை கட்டித் தருவதாக ஏற்கெனவே தமிழக முதல்வா் ஒப்புதல் அளித்துள்ளாா். அதனடிப்படையில், விரைந்து பாலம் கட்டித் தரவேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசாவை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா் ராசி ரவிக்குமாா், புளியம்பாறை கிளை செயாலாளா் சுபையா் தலைமையில் நிா்வாகி சுலைமான், குஞ்சலவி உள்பட புளியம்பாறை கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் சந்தித்து மனு அளித்தனா்.