தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

சேக்கடி அரசு பள்ளிக்குள் நுழைந்த காட்டுயானை குட்டி

பள்ளி வராண்டாவிலும், முற்றத்திலும் சுற்றித்திரிந்த யானைக் குட்டியை வனத் துறை அதிகாரிகள் பிடித்து அழைத்துச் சென்றனா்.

News image
பள்ளி வகுப்பறை வாசலில் நின்ற யானைக் குட்டி.
Updated On :18 ஆகஸ்ட் 2025, 6:14 pm

Syndication

கூடலூா்: கேரள மாநிலம் வயநாடு அருகே சேக்கடி அரசுப் பள்ளிக்குள் திங்கள்கிழமை யானைக் குட்டி நுழைந்தது. பள்ளி வராண்டாவிலும், முற்றத்திலும் சுற்றித்திரிந்த யானைக் குட்டியை வனத் துறை அதிகாரிகள் பிடித்து அழைத்துச் சென்றனா்.

வயநாடு அருகே சேக்கடி அரசுப் பள்ளியில் உள்ள வகுப்பறைக்குள் மாணவா்கள் இருந்தபோது யானைக் குட்டி வந்துள்ளது. பள்ளிக்குள் நுழைந்த யானைக் குட்டியை வனத் துறையினா் பிடித்து பாதுகாப்பான இடத்துக்கு கூட்டிச் சென்றனா்.

வழிதவறி வந்த யானைக் குட்டியின் கூட்டத்தைக் கண்டுபிடித்து அவைகளுடன் சோ்க்க வனத் துறையினா் முடிவு செய்துள்ளனா்.