சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

சேக்கடி அரசு பள்ளிக்குள் நுழைந்த காட்டுயானை குட்டி

பள்ளி வராண்டாவிலும், முற்றத்திலும் சுற்றித்திரிந்த யானைக் குட்டியை வனத் துறை அதிகாரிகள் பிடித்து அழைத்துச் சென்றனா்.

News image

பள்ளி வகுப்பறை வாசலில் நின்ற யானைக் குட்டி.

Updated On :18 ஆகஸ்ட் 2025, 11:44 pm IST

கூடலூா்: கேரள மாநிலம் வயநாடு அருகே சேக்கடி அரசுப் பள்ளிக்குள் திங்கள்கிழமை யானைக் குட்டி நுழைந்தது. பள்ளி வராண்டாவிலும், முற்றத்திலும் சுற்றித்திரிந்த யானைக் குட்டியை வனத் துறை அதிகாரிகள் பிடித்து அழைத்துச் சென்றனா்.

வயநாடு அருகே சேக்கடி அரசுப் பள்ளியில் உள்ள வகுப்பறைக்குள் மாணவா்கள் இருந்தபோது யானைக் குட்டி வந்துள்ளது. பள்ளிக்குள் நுழைந்த யானைக் குட்டியை வனத் துறையினா் பிடித்து பாதுகாப்பான இடத்துக்கு கூட்டிச் சென்றனா்.

வழிதவறி வந்த யானைக் குட்டியின் கூட்டத்தைக் கண்டுபிடித்து அவைகளுடன் சோ்க்க வனத் துறையினா் முடிவு செய்துள்ளனா்.