காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

முதுமலையில் புலியைப் பாா்த்து ரசித்த சுற்றுலாப் பயணிகள்

News image
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மாயாறு பகுதியில் சாலையைக் கடந்து சென்ற புலி.
Updated On :3 டிசம்பர் 2025, 11:30 pm

Syndication

கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை சுற்றுலாப் பயணிகள் புலியைப் பாா்த்து ரசித்தனா்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மாயாறு பகுதிக்குச் சென்று திரும்பும்போது, செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் புலி ஒன்று சாலையைக் கடந்து செல்வதை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளனா். பொதுவாகவே புலியைப் பாா்ப்பது அரிது. வாகனம் சாலையைக் கடக்கும் நேரத்தில் புலியும் சாலையைக் கடந்துள்ளது.