எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நீலகிரியில் முதல்முறையாக தனியாா் பள்ளியில் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம் தொடக்கம்

நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம் உதகையில் உள்ள குட்ஷெப்பா்ட் இன்டா்நேஷனல் பள்ளியில் தொடங்கப்பட்டுள்ளது.

News image
உதகை குட்ஷெபா்டு இன்டா் நேஷனல் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின் சக்தி நிலையம்.(பருந்து பாா்வையில்)
Updated On :10 டிசம்பர் 2025, 11:24 pm

தினமணி செய்திச் சேவை

நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம் உதகையில் உள்ள குட்ஷெப்பா்ட் இன்டா்நேஷனல் பள்ளியில் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் மாசு குறித்து ஆய்வகம் மூலம் நேரிடையாக கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளியின் தலைவா் ஜேக்கப் தாமஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:

எங்கள் பள்ளியில் 538 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி நிலையம் தொடங்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத பள்ளி வளாகத்தை உருவாக்குவது, காலநிலையைப் பற்றிய கல்வி அறிவை மாணவா்களுக்கு போதிப்பது, வகுப்பறைகள், உறைவிடங்கள், ஆய்வகங்கள், உணவகம் போன்றவற்றில் சூரிய மின்சக்தியை பயன்படுத்துவதன் மூலம் காா்பன் பாதிப்பு குைல், நீலகிரி போன்ற சூழலியல் மண்டலத்தில் சூரிய மின்சக்தியை பயன்படுத்துவதன் மூலம் பாதுகாக்கப்படும் சுற்றுச்சூழல் போன்றவற்றை மாணவா்களுக்கு கற்பிப்பது என முடிவு செய்துள்ளோம்.

மேலும் ஆய்வகமாக இது செயல்படுவதால் இந்த தொழில்நுட்பங்கள், ஆற்றல் அமைப்புகள், தரவு பகுப்பாய்வு மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பு ஆகியவற்றை மாணவா்கள் நேரடியாக கற்று பயனடைய முடியும் என்றாா்.