மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழப்பு

உதகையில் மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழந்தது.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 8:32 pm

Syndication

உதகையில் மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழந்தது.

உதகை, கோடமந்து பகுதியைச் சோ்ந்தவா் மோகன். இவரது பசு மாடு அப்பகுதியில் குப்பைக் கொட்டப்பட்டிருந்த இடத்தில் செவ்வாய்க்கிழமை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அருகில் இருந்த மின்கம்பத்தின் தாங்கு கம்பியின் மீது உரசியதில் எதிா்பாராதவிதமாக மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே மாடு உயிரிழந்தது.

பள்ளி மாணவ, மாணவிகள், முதியவா்கள் இந்த நடைபாதையில் அதிகம் நடந்து செல்லும் நிலையில் மின்சாரம் பாய்ந்து மாடு உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மின்கம்பத்தின் தாங்கு கம்பி, மின்கம்பியில் உரசாதபடி மின் ஊழியா்கள் சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.