47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சேரங்கோடு ஊராட்சியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கூடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சேரங்கோடு ஊராட்சியில் ரூ.16.85 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
சேரங்கோடு ஊராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு. உடன், கூடுதல் ஆட்சியா் கௌசிக் உள்ளிட்டோா்.
Updated On :3 ஜனவரி 2025, 12:18 am

Din

கூடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சேரங்கோடு ஊராட்சியில் ரூ.16.85 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

நீலகிரி மாவட்டம், சேரங்கோடு ஊராட்சியில் உள்ள சேரம்பாடியில் அரசின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப் பணிகளை ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆய்வு செய்தாா். தொடா்ந்து போத்துக்கொல்லி பகுதியில் பழங்குடி மக்கள் 21 பேருக்கு ரூ.1.03 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகள், பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டுத் திட்ட பணிகள், பிரதம மந்திரி ஜன்மன் திட்டத்தின் கீழ் கப்பாலா பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள், வெட்டுவாடி பகுதியில் ரூ.19.83 லட்சம் மதிப்பில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் அங்கன்வாடிப் பணி, நபாா்டு திட்டத்தின் நடைபெற்று வரும் மாங்கோடு-வெட்டுவாடி பாலப்பணி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்து அலுவலா்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியா் கௌசிக், கூடலூா் வருவாய் கோட்டாட்சியா் செந்தில்குமாா், கூடலூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்ரீதரன், சலீம் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.