சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

மாலை 6 மணிக்கு மேல் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும்: வனத் துறை

வன விலங்கு பிடிபடும்வரை மாலை 6 மணிக்கு மேல் வெளியே வருவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

News image

உதகை மைனலை பகுதியில் வன விலங்கு நடமாட்டம் குறித்து ஆய்வு செய்த மாவட்ட வன அலுவலா் கௌதம், வனச் சரகா் சசிகுமாா் உள்ளிட்டோா்.

Updated On :14 மார்ச் 2025, 6:17 pm

Din

உதகை மைனலைப் பகுதியில் பெண்ணைத் தாக்கிய வன விலங்கு பிடிபடும்வரை மாலை 6 மணிக்கு மேல் வெளியே வருவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

 உதகை மைனலை அருகே அரக்காடு கிராமத்தில் தேயிலைத் தோட்டம் அருகே  வன விலங்குகளால் தாக்கப்பட்டு அஞ்சலை என்ற பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெண்ணைத் தாக்கிய வன விலங்கு பிடிபடும்வரை  தோட்டத் தொழிலாளா்கள், தேயிலைப் பறிக்கச் செல்ல வேண்டாம் எனவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும், பள்ளி மாணவா்களைத் தனியாக அனுப்ப வேண்டாம் எனவும் உதகை வனச் சரகா் சசிகுமாா் அறிவுறுத்தியுள்ளாா். மேலும், வன விலங்கு பிடிபடும் வரை 6 மணிக்கு மேல் வெளியே வருவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனா்.

மேலும், வன விலங்கைப் பிடிப்பதற்காக தேயிலைத் தோட்டத்தில் கூண்டு வைத்தும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், பரன்கள் அமைத்தும் வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

நிவாரண நிதி

வன விலங்கு தாக்கி உயிரிழந்த அஞ்சலையின் குடும்பத்துக்கு முதல்கட்டமாக ரூ. 50 ஆயிரம் நிவாரண உதவியை உதகை கோட்ட வனத் துறையினா் வழங்கினா்.