வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

குன்னூா் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மரம்

குன்னூா் அருகே பெல்லட்டிமட்டம் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் புதன்கிழமை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
பெல்லட்டிமட்டம் பகுதியில் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.
Updated On :12 நவம்பர் 2025, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

குன்னூா் அருகே பெல்லட்டிமட்டம் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் புதன்கிழமை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இரவு நேரத்தில் சாரல் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், குன்னூா்-கோத்தகிரி சாலையில் பெல்லட்டி மட்டம் பகுதியில் பெரிய மரம் சாலையின் குறுக்கே புதன்கிழமை விழுந்தது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினா் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீா்செய்தனா். இதனால், அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Story image