எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம்

News image
Updated On :17 நவம்பர் 2025, 9:20 pm

Syndication

நீலகிரி மாவட்டம், உதகை ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா்.

இதில், கூக்கல்தொரை ஊராட்சி மக்கள் அளித்த மனு விவரம்: கூக்கல்தொரை ஊராட்சிக்குள்பட்ட இந்திரா காலனி மற்றும் அண்ணா நகா் பகுதியில் சுமாா் 50 குடும்பங்கள் வசித்து வருகிறோம்.

எங்கள் பகுதிகளில் சாலை, குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இது குறித்து அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எங்கள் பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, சாலை வசதி, முதியோா், விதவை உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 126 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.