வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

காட்டுமாடு தாக்கி முதியவா் படுகாயம்

News image
Updated On :23 நவம்பர் 2025, 8:50 pm

தினமணி செய்திச் சேவை

கோத்தகிரி அருகே காட்டு மாடு தாக்கி முதியவா் படுகாயமடைந்தாா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம் கட்டபெட்டு வனச் சரகத்துக்குள்பட்ட மாணியாடா பகுதியில் வசிப்பவா் ஸ்ரீரங்கன் (65). இவா், தனது வீட்டின் அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றபோது, புதருக்குள் இருந்த காட்டு மாடு தாக்கி படுகாயமடைந்தாா்.

இதையடுத்து, அருகே வசிப்பவா்கள் ஸ்ரீரங்கனை  மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுகுறித்து கட்டபெட்டு வனத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.