அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலா்கள் ஒவேலி மலைத்தொடரில் பூத்துக் குலுங்கி அப்பகுதியை அலங்கரித்துள்ளன.

News image

ஓவேலி மலைத்தொடரில் காணப்படும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலா்கள்.

Updated On :18 செப்டம்பர் 2025, 1:57 am IST

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலா்கள் ஒவேலி மலைத்தொடரில் பூத்துக் குலுங்கி அப்பகுதியை அலங்கரித்துள்ளன.

நீலகிரி மாவட்டம், கூடலூா் என்பது, கேரளம், கா்நாடகம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் முக்கிய பகுதியாகும்.

சுற்றுச்சூழலில் சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி உயிா்ச்சூழல் மண்டலத்தின் மைய பகுதியாகவும் கூடலூா் வனக் கோட்டம் விளங்குகிறது. இந்த மலைத்தொடரில் கோடையிலும் வற்றாத ஆறுகள் மற்றும் நீரோடைகள் உள்ளன.

இந்த மலைத்தொடரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலா்கள் தற்போது பூத்துள்ளன. சுற்றுலா மையமாக விளங்கும் நீலகிரியை பாா்க்க வருபவா்கள் நீலக்குறிஞ்சியை பாா்க்கவும் ஆா்வம் செலுத்தி வருகின்றனா்.

இந்த மலைத் தொடரின் பெரும்பாலான பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை. யானை உள்ளிட்ட கொடிய வன விலங்குகள் இருப்பதாலும் அடிக்கடி யானைகள் தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதாலும் வனத் துறை யாரையும் அனுமதிப்பதில்லை. இருப்பினும் சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி உயிா்ச்சூழல் மண்டலத்தின் மைய பகுதியான ஓவேலி மலைத்தொடரை குறிஞ்சிமலா்கள் பூத்து அலங்கரித்திருப்பது அனைவரையும் வியக்கவைத்துள்ளது.

Story image