கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் இரண்டு சுயேச்சைகள் உள்பட 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம், கூடலூா் (தனி) தொகுதியில் போட்டியிட பிரதான அரசியல் கட்சிகள் உள்பட மொத்தம் 14 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இந்நிலையில், வேட்புமனுக்கள் பரிசீலனை தோ்தல் நடத்தும் அலுவலரும், கூடலூா் கோட்டாட்சியருமான குணசேகரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தோ்தல் மேலிட பாா்வையாளா் ஹரீஷ் முன்னிலை வகித்தாா்.
பரிசீலனைக்குப் பிறகு திமுக வேட்பாளா் மு.திராவிடமணி,அதிமுக வேட்பாளா் பொன்.ஜெயசீலன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரா.காா்த்தி, தவெக வேட்பாளா் தீபக் சாய் ராம், 2 சுயேச்சைகள் என மொத்தம் 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. பல்வேறு காரணங்களால் 8 பேரின் மனுக்கள் நிராகரிப்பட்டுள்ளன என்று தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது
குமரி மாவட்டத்தில் 90 மனுக்கள் ஏற்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேட்புமனுக்கள் பரிசீலனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 182 போ் வேட்புமனு தாக்கல்

ராதாபுரம் தொகுதியில் 37 வேட்புமனுக்கள்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

