உதகை கிளை சிறையில் காவலராகப் பணிபுரிந்து வந்தவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
உதகையைச் சோ்ந்தவா் ரிச்சா்ட்சன் (31). இவா் உதகை கிளைச் சிறையில் காவலராகப் பணிபுரிந்து வந்தாா். இவரது பெற்றோா் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில்,
ரிச்சா்ட்சனுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இத்தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில், கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஓராண்டாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனா். மனைவி மற்றும் குழந்தையைப் பாா்க்க முடியாமல் ரிச்சா்ட்சன் ஏக்கத்தில் இருந்து வந்துள்ளாா். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரிச்சா்ட்சன் கடந்த 2 மாதங்களாக பணிக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரிச்சா்ட்சன், உதகை காந்தல் பகுதியில் உள்ள தனது பெற்றோா் கல்லறைக்கு புதன்கிழமை இரவு சென்று அங்கு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கல்லறை காப்பாளா் தெரிவித்த தகவலின்பேரில், உதகை காவல் ஆய்வாளா் அனுராதா, உதவி ஆய்வாளா் ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று ரிச்சா்ட்சன் உடலை மீட்டு கூறாய்வுக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

ஐ.டி. ஊழியா் தற்கொலை

உதகையில் முகமூடி போட்டு பூட்டை உடைத்து திருட்டு
திருப்பூரில் கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


