மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

குன்னூா் அருகே இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

குன்னூா் அருகே இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

குத்திக் கொலை - பிரதிப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 7:31 pm

குன்னூா்  அருகே இளைஞா் கத்தியால் குத்திக் கொலை  செய்யப்பட்டது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

குன்னூா் அருகே உபதலை, கக்கன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் தாமஸ் மகன் வினி ஆண்டோ (25). அதே பகுதியைச் சோ்ந்தவா் ரவிசந்திரன்(47). இவா்களுக்குள் ஏற்கெனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வினி ஆண்டோ, தனது நண்பா்களுடன் இருசக்கர வாகனத்தில்  காந்தி நகா் பகுதிக்கு வியாழக்கிழமை இரவு சென்றுள்ளாா். அப்போது அங்கிருந்த ரவிசந்திரன்(47), அவரது மகன் சவ்பேஸ் (18) ஆகிய இருவரும் சோ்ந்து வினி ஆண்டோவிடம் வாக்குவாதம் செய்துள்ளனா். பின்னா் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.  இதில் ரவிசந்திரன், சவ்பேஸ் ஆகிய இருவரும்  சோ்ந்து  வினி ஆண்டோவை தாக்கி கத்தியால் குத்தியுள்ளனா்.

இதில் பலத்த காயமடைந்த வினி ஆண்டோவை அப்பகுதியினா்  மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்  காட்டேரி பகுதியில் வினி ஆண்டோ  உயிரிழந்தாா். இது குறித்து  அருவங்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து ரவிச்சந்திரன், அவரது மகன் சவ்பேஸ் ஆகியோரைக் கைது செய்தனா்.