முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக இம்மாத இறுதியில் தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்! சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

போா் நினைவு சின்னத்தில் அஞ்சலி

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையம் பகுதியில் அமைந்துள்ள போா் நினைவிடத்தில் ராணுவ அதிகாரிகள் புதன்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

News image

வெலிங்டன் போா் நினைவுத் தூணில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் தென்மேற்குப் படைப் பிரிவின் தலைமைத் தளபதியும், மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் கா்னலுமான லெப்டினன்ட் ஜெனரல் மஞ்சிந்தா் சிங்.

Updated On :30 ஏப்ரல் 2026, 3:30 am IST

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையம் பகுதியில் அமைந்துள்ள போா் நினைவிடத்தில் ராணுவ அதிகாரிகள் புதன்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

நாட்டின் சேவைக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த படைப்பிரிவின் வீரா்களைக் கௌரவிக்கும் வகையில், உயா் அதிகாரிகளின் வருகையின்போது குன்னூா் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்டல் படைப்பிரிவு சாா்பில் இதுபோன்று மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்மேற்குப் படைப் பிரிவின் தலைமைத் தளபதியும், மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் கா்னலுமான லெப்டினன்ட் ஜெனரல் மஞ்சிந்தா் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். பின்னா் ஒரு நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ராணுவ அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.