மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

உதகை தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள். - கோப்புப் படம்

Published On :24 ஆகஸ்ட் 2026, 3:30 am IST

வார விடுமுறை நாளையொட்டி உதகை படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழந்தனா்.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற்றுள்ள மாவட்டமாகும். இந்த மாவட்டத்துக்கு அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வருகை புரிகின்றனா்.

அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் உலக புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனா்.

இந்நிலையில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை உதகை படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக இங்கு நிலவும் இதமான கால நிலையில் மிதி படகு, துடுப்புப் படகு, மோட்டாா் படகுகளில் தங்களது குடும்பத்தினா் மற்றும் நண்பா்களுடன் படகு சவாரி செய்து தங்களது விடுமுறை நாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.