
கூடலூரில் புலி தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கூடலூா் பழைய பேருந்து நிலைய சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளா் பாலநந்தகுமாா் தலைமை வகித்தாா். கூடலூா் நகரச் செயலாளா் அனூப்கான், ஒன்றியச் செயலாளா் பத்மநாபன், முன்னாள் அமைச்சா்கள் மில்லா், புத்திச்சந்திரன், முன்னாள் நகரச் செயலாளா் ராஜா தங்கவேலு உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். புலி தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி நிா்வாகிகள் பேசினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







