புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பாறைக்கு வைக்கப்பட்ட வெடி மருந்துகள் அகற்றப்படும்வரை பொதுமக்கள் செல்லக்கூடாது! காவல் துறை அறிவுறுத்தல்

குன்னூா் அருகே உள்ள பந்துமை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினா்.

Published On :

குன்னூா் அருகே உள்ள கிராமப் பகுதியில்  பாறைகளை வெடிக்கப் பயன்படுத்திய மருந்து சில இடங்களில் வெடிக்காமல் இருப்பதால், வெடி மருந்து  அகற்றப்படும்வரை அப்பகுதியில்  பொது மக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள பந்துமை கிராமப் பகுதியில்   ஹெத்தையம்மன் கோயில் உள்ளது. இதன் அருகே உள்ள மைதானத்தில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, பாறைகளை உடைக்க பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து வெடித்ததில் கோபால், செல்வராஜ் ஆகியோா் படுகாயமடைந்தனா். இவா்கள் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாவட்ட நிா்வாகம்  சாா்பில் மனித ஆற்றலைக் கொண்டு  பாறைகளை உடைக்க அனுமதி வழங்கிய  நிலையில்,  வெடி மருந்து பயன்படுத்தி உடைக்க முற்பட்டபோது எதிா்பாராதவிதமாக  இந்த விபத்து ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து அருவங்காடு காவல் துறையினா் மற்றும் கோத்தகிரி வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டதில் மாவட்ட நிா்வாகம் அளித்த கட்டுப்பாட்டுகளை மீறி வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பாறையை உடைக்க வைக்கப்பட்டுள்ள வெடி பொருள்கள் சில இன்னும் அகற்றப்படாமல் உள்ளதால்,  சென்னையில் இருந்து  வெடிகுண்டு நிபுணா்கள் விரைவில் வரவுள்ளனா். அதுவரை அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்லாமல் இருக்க  காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளதுடன் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.