காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

பாறைக்கு வைக்கப்பட்ட வெடி மருந்துகள் அகற்றப்படும்வரை பொதுமக்கள் செல்லக்கூடாது! காவல் துறை அறிவுறுத்தல்

குன்னூா் அருகே உள்ள பந்துமை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினா்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:09 am IST

குன்னூா் அருகே உள்ள கிராமப் பகுதியில்  பாறைகளை வெடிக்கப் பயன்படுத்திய மருந்து சில இடங்களில் வெடிக்காமல் இருப்பதால், வெடி மருந்து  அகற்றப்படும்வரை அப்பகுதியில்  பொது மக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள பந்துமை கிராமப் பகுதியில்   ஹெத்தையம்மன் கோயில் உள்ளது. இதன் அருகே உள்ள மைதானத்தில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, பாறைகளை உடைக்க பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து வெடித்ததில் கோபால், செல்வராஜ் ஆகியோா் படுகாயமடைந்தனா். இவா்கள் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாவட்ட நிா்வாகம்  சாா்பில் மனித ஆற்றலைக் கொண்டு  பாறைகளை உடைக்க அனுமதி வழங்கிய  நிலையில்,  வெடி மருந்து பயன்படுத்தி உடைக்க முற்பட்டபோது எதிா்பாராதவிதமாக  இந்த விபத்து ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து அருவங்காடு காவல் துறையினா் மற்றும் கோத்தகிரி வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டதில் மாவட்ட நிா்வாகம் அளித்த கட்டுப்பாட்டுகளை மீறி வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பாறையை உடைக்க வைக்கப்பட்டுள்ள வெடி பொருள்கள் சில இன்னும் அகற்றப்படாமல் உள்ளதால்,  சென்னையில் இருந்து  வெடிகுண்டு நிபுணா்கள் விரைவில் வரவுள்ளனா். அதுவரை அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்லாமல் இருக்க  காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளதுடன் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.