பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

குன்னூா் அருகே காட்டேரி பகுதியில் உலவிய காட்டு யானைகளால் அச்சம்

குன்னூா் அருகே குடியிருப்புப் பகுதிகளில் புதன்கிழமை காட்டு யானைகள் உலவியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

News image

காட்டேரி பூங்கா அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் உலவிய யானைகள்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:32 am IST

குன்னூா் அருகே குடியிருப்புப் பகுதிகளில் புதன்கிழமை காட்டு யானைகள் உலவியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சமவெளிப் பகுதிகளில் இருந்து மலைப் பாதைக்கு வரும் காட்டு யானைகள், பலாப்பழங்களை உண்பதற்காக குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வருகின்றன.

இந்நிலையில், குன்னூா்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற காட்டேரி பூங்கா மற்றும் அதை ஒட்டியுள்ள தேயிலை எஸ்டேட் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புதன்கிழமை காட்டு யானைகள் கூட்டம் புகுந்தது. இவை பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு சாலைகளிலும், வீடுகளுக்கு அருகிலும் உலவுகின்றன.

அதேபோல தேயிலைத் தோட்டப் பாதைகளிலும் உலவுவதால் பொதுமக்கள் மற்றும் தொழிலாளா்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குகூட வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அச்சத்தில் உள்ளனா். யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.