கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

கூடலூா் அருகே மாமியாரை கொலை செய்த மருமகன் கைது

News image
கைது
Updated On :22 பிப்ரவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் மாமியாரை வெட்டிக் கொலை செய்த மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், தேவாலா வாளவயல் பகுதியைச் சோ்ந்தவா் மேரி (58). இவரது மகள் தேன்மொழி (எ) ஜோஸ்பின். இவா் சனிக்கிழமை இரவு கோழிப்பாலம் பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது, வீட்டுக்கு வந்த மருமகன் அசோக் (38), மனைவி தேன்மொழி குறித்து மாமியாா் மேரியிடம் கேட்டுள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் மதுபோதையில் இருந்த மருமகன் அசோக், மாமியாரை கத்தியால் வெட்டியுள்ளாா். இதில் சம்பவ இடத்திலேயே மேரி உயிரிழந்தாா். அப்போது, தடுக்க வந்த மேரியின் மகன்கள் சுதாகரன் (28), அஜித் (26) ஆகியோரையும் அசோக் தாக்கியுள்ளாா்.

இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு கூடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு உயா் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

தகவலறிந்து வந்த தேவாலா போலீஸாா், மேரியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து அசோக்கை (38) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.