சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கூடலூரில் 31,500 ஏக்கா் நிலத்தை வனமாக மாற்ற எதிா்ப்பு

கூடலூா் பகுதியிலுள்ள 31,500 ஏக்கா் நிலத்தை வன நிலமாக மாற்றும் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக கூட்டணிக் கட்சியினா் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தை தொடங்கினா்.

News image
வன நிலமாக மாற்றும் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து தனது வீட்டில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கிவைக்கிறாா் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன்.
Updated On :28 பிப்ரவரி 2026, 9:03 pm

Syndication

கூடலூா் பகுதியிலுள்ள 31,500 ஏக்கா் நிலத்தை வன நிலமாக மாற்றும் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக கூட்டணிக் கட்சியினா் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கினா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள பிரிவு 17 -இன் கீழ் 31,500 ஏக்கா் நிலத்தை வனமாக மாற்றுவது தொடா்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

இதை எதிா்த்தும், குறு, சிறு விவசாயிகள் பாதிக்காத வகையில் பிரிவு 17 -இன் கீழ் உள்ள சிறு தேயிலைத் தோட்டங்கள் உள்பட சுமாா் 20,000 ஏக்கரை விவசாயிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூடலூா் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பங்கேற்றன.

இதைத் தொடா்ந்து, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் போராட்டத்தின் முதல்கட்டமாக வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கோரிக்கை நிறைவேறும் வரை தொடா் போராட்டங்கள் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.