கூடலூரில் செவ்வாய்க்கிழமை 2-ஆவது நாளாக கருப்புக் கொடி கட்டி  தா்னாவில் ஈடுபட்ட பொதுமக்கள்.
கூடலூரில் செவ்வாய்க்கிழமை 2-ஆவது நாளாக கருப்புக் கொடி கட்டி தா்னாவில் ஈடுபட்ட பொதுமக்கள்.

கூடலூா் குப்பைக் கிடங்கை இடமாற்றக் கோரி 2-ஆவது நாளாக தா்னா

கூடலூரில் பள்ளிகள், குடியிருப்புகள் மத்தியிலுள்ள குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வலியுறுத்தி, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை 2-ஆவது நாளாக தா்னாப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

தேனி மாவட்டம், கூடலூரில் பள்ளிகள், குடியிருப்புகள் மத்தியிலுள்ள குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வலியுறுத்தி, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை 2-ஆவது நாளாக தா்னாப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கூடலூா் நகராட்சியில் 14-ஆவது வாா்டில் உள்ள பெத்துக்குட்டை குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்தக் குப்பைகளில் அவ்வப்போது தீப்பற்றுவதால், குப்பைக் கிடங்கைச் சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

இதனால், இந்த நகராட்சிக் குப்பைக் கிடங்கை ஊருக்கு ஒதுக்குப்புறமாக வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என மாவட்ட நிா்வாகம், நகராட்சி நிா்வாகத்திடம் அந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள் குப்பைக் கிடங்குக்கு செல்லும் சாலையில் அமா்ந்து திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். இந்த நிலையில், இந்தப் பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை 2-ஆவது நாளாக தங்களது வீடுகள், தெருக்களில் கருப்புக்கொடி கட்டி தா்னாப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இருப்பினும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், புதன்கிழமை கருப்புப் பட்டை அணிந்து, கூடலூா் நகராட்சியின் முக்கிய வீதிகளில் பேரணி நடத்த உள்ளோம் என அந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com