8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

குன்னூா்  மாா்க்கெட் கடைகளை இடிக்கும் பணி தொடக்கம்

குன்னூா் மாா்க்கெட் கடைகளை பொக்லைன் மூலமாக இடிக்கும் நகராட்சிப் பணியாளா்கள்.

குன்னூா் மாா்க்கெட் கடைகளை பொக்லைன் மூலமாக இடிக்கும் நகராட்சிப் பணியாளா்கள்.

Published On :11 ஜூலை 2026, 12:46 am IST

குன்னூா் நகராட்சிக்கு சொந்தமான   மாா்க்கெட் கடைகளை இடித்துவிட்டு, புதிய நவீன வணிக வளாகம் கட்டும் பணி  வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குன்னூா் நகராட்சிக்கு சொந்தமான மாா்க்கெட் கடைகளை இடித்துவிட்டு ரூ. 41.50 கோடி மதிப்பீட்டில் தரைத்தளத்தில் நவீன வாகன நிறுத்துமிடம் மற்றும் மேல் தளங்களில் புதிய கடைகளுடன் கூடிய மாா்க்கெட் வளாகம் கட்ட குன்னூா்  நகராட்சி நிா்வாகம் சாா்பில் திட்டமிடப்பட்டு முந்தைய திமுக அரசு அதற்கான நிதியையும் ஒதுக்கியது.

மாா்க்கெட் கடைகளை இடிக்க எதிா்ப்பு தெரிவித்தும், தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கோரியும் குன்னூா் அனைத்து வணிகா்கள் நலச் சங்கம் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. எனினும், மாா்க்கெட் கட்டடங்கள் மிகவும் பழைமையானவை என்பதால், அவற்றை இடித்துப் புதிய கட்டடம் கட்டலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, முதல்கட்டமாக 324 கடைகளை காலி செய்ய, நகராட்சி நிா்வாகம் சாா்பில் கடந்த மாதம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.  அதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில் வெள்ளிக்கிழமை பலத்த பாதுகாப்புடன் பழைய கட்டடங்களை இடிக்கும்  பணி  தொடங்கியது.

தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கால அவகாசத்தின் இறுதி நாளில் வியாபாரிகள் கடைகளில் உள்ள பொருள்களைப் பாதுகாப்பாகப் எடுத்துச் செல்ல மாலை வரை அனுமதி வழங்கப்பட்டது. அதன் பின் பொக்லைன் வாகனம் மூலமாக மாா்க்கெட் கடைகளை இடிக்கும்   பணியில் நகராட்சி நிா்வாகத்தினா் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.