நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

உதகை சிறப்பு மலை ரயிலில்  பயணிக்க சுற்றுலாப் பயணிகள் ஆா்வம்

நீலகிரி சிறப்பு மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் ஆா்வம் காட்டினா்.

News image

உதகை ரயில் நிலையத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :13 ஜூலை 2026, 12:45 am IST

நீலகிரி சிறப்பு மலை ரயிலில்  பயணிக்க  சுற்றுலாப் பயணிகள் ஆா்வம் காட்டினா்.

கோடைக் காலம் மற்றும் வார இறுதி நாள்களில் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, மேட்டுப்பாளையம் - உதகை இடையே ஜூலை 10-ஆம் தேதிமுதல் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்  சிறப்பு  ரயில் இயக்கப்படுகிறது.

இதேபோல மறுமாா்க்கமாக உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு ஜூலை 11-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை சனிக்கிழமை மற்றும் திங்கள்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் உதகைக்கு வந்த  சுற்றுலாப் பயணிகள்  இந்த சிறப்பு ரயிலில் பயணித்து மகிழ்ச்சி அடைந்தனா்.  

குறிப்பாக பல்வேறு திரைப்படங்கள்  எடுக்கப்பட்ட,  லவ்டேல் ரயில் நிலையத்தில் புகைப்படம்  எடுத்ததோடு, இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து மலை ரயிலில் பயணித்து மகிழ்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.