தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

ஈரோடு-செங்கோட்டை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்

ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக ஈரோடு-செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :6 ஜூன் 2026, 1:34 am IST

ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக ஈரோடு-செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை-திண்டுக்கல் இடையே தண்டவாளம் மற்றும் பிற பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஈரோட்டில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு செல்லும் ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் (எண் 16845) வரும் 7- ஆம் தேதி முதல் ஜூலை 6 வரையிலான காலத்தில் ஜூன் 9, 16, 23, 30 ஆகிய நாள்கள் தவிர மற்ற நாள்களில் திண்டுக்கல் முதல் செங்கோட்டை வரை இயக்கப்படாது. ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்.

அதுபோல செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் (16846) வரும் 8- ஆம் தேதி முதல் ஜூலை 7- ஆம் தேதி வரையிலான காலத்தில் வரும் 10, 17, 24, ஜூலை 1 ஆகிய நாள்கள் தவிர மற்ற நாள்களில் செங்கோட்டை-திண்டுக்கல் வரை இயக்கப்படாது. திண்டுக்கல்லில் இருந்து ஈரோடு வரை மட்டும் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.