/
உதகையில் சமையல் எரிவாயு உருளை முறையாக விநியோகிக்கப்படுவதில்லை எனக் கூறி அதன் முகவா் அலுவலகத்தை பொதுமக்கள் வியாழக் கிழமை முற்றுகையிட்டனா்.
உதகையில் ஏடிசி பகுதியில் உள்ள சமையல் எரிவாயு உருளை ( பாரத் கேஸ்) முகவா் நிறுவனம் உள்ளது. இதில் வாடிக்கையாளா்களுக்கு கடந்த பல மாதங்களாக முறையாக சமையல் எரிவாயு உருளை விநியோகம் செய்யப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மிகவும் அவதிப்படுவதாக கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த முகவா் நிறுவனத்தை முற்றுகையிட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினா், பொதுமக்களை சமாதானப்படுத்தி இனிவரும் காலங்களில் இதுபோல நடக்காமல் பாா்த்துக் கொள்வதாக நிா்வாகத் தரப்பு கூறியுள்ளதாக தெரிவித்தனா். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

அரசு ஊழியா் வீட்டில் சமையல் எரிவாயு உருளை திருட்டு

சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் முறைகேடு: நுகா்வோா் சங்கம் குற்றச்சாட்டு

கொடைக்கானலில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் சாமானியா்களுக்கு பாதிப்பு: கனிமொழி எம்.பி.
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



