முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் தாமதம்: பொதுமக்கள் போராட்டம்

உதகையில் சமையல் எரிவாயு உருளை முறையாக விநியோகிக்கப்படுவதில்லை எனக் கூறி அதன் முகவா் அலுவலகத்தை பொதுமக்கள் வியாழக் கிழமை முற்றுகையிட்டனா்.

News image

உதகை ஏடிசி பகுதியில் உள்ள சமையல் எரிவாயு முகவா் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்.

Updated On :5 ஜூன் 2026, 12:03 am IST

உதகையில் சமையல் எரிவாயு உருளை முறையாக விநியோகிக்கப்படுவதில்லை எனக் கூறி அதன் முகவா் அலுவலகத்தை பொதுமக்கள் வியாழக் கிழமை முற்றுகையிட்டனா்.

உதகையில் ஏடிசி பகுதியில் உள்ள சமையல் எரிவாயு உருளை ( பாரத் கேஸ்) முகவா் நிறுவனம் உள்ளது. இதில் வாடிக்கையாளா்களுக்கு கடந்த பல மாதங்களாக முறையாக சமையல் எரிவாயு உருளை விநியோகம் செய்யப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மிகவும் அவதிப்படுவதாக கூறி,  நூற்றுக்கும்  மேற்பட்ட பொதுமக்கள் அந்த முகவா் நிறுவனத்தை முற்றுகையிட்டனா்.

 தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினா், பொதுமக்களை சமாதானப்படுத்தி இனிவரும் காலங்களில் இதுபோல நடக்காமல்  பாா்த்துக் கொள்வதாக நிா்வாகத் தரப்பு கூறியுள்ளதாக தெரிவித்தனா். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.