எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கோத்தகிரியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

News image

சித்திரிப்பு

Updated On :8 ஜூன் 2026, 1:21 am IST

கோத்தகிரியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரைக் கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் காரில் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கோத்தகிரி உதவி ஆய்வாளா் பிரசாந்த், காவலா்கள் வாகனத் தணிக்கையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, பஜாா் பகுதியில் வந்த காரில் இருந்து 345 புகையிலை பாக்கெட்டுகள், 7 கிலோ குட்கா ஆகியன கைப்பற்றப்பட்டன. இது தொடா்பாக கன்னிகாதேவி காலனியை சோ்ந்த பெருமாள் (33), விசாவு (33) ஆகிய இருவரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.