எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கோயிலுக்குள் நுழைந்த கரடி

News image

அம்மன் கோயிலில் நுழைந்த கரடி.

Updated On :8 ஜூன் 2026, 1:02 am IST

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே கரிமொராஹட்டி பகுதியில் கோயில் கதவை கரடி திறந்து அங்கு வைத்திருந்த பொருள்களை உண்டதுடன், தண்ணீா்த் தொட்டி குழாய்களையும் சேதப்படுத்திச் சென்றது. 

குன்னூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கரிமொராஹட்டி பகுதியில் அமைந்துள்ள அம்மன்  கோயிலுக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வந்த கரடி, கோயிலின் கதவை  லாவகமாகத் திறந்து பூஜை பொருள்களை  வெளியே எடுத்து வந்து உண்டது. பின்னா், தண்ணீா்த் தொட்டி குழாய்களை சேதப்படுத்தியது.

நீண்ட நேரம் கோயில் வளாகத்தில் சுற்றித் திரிந்த கரடி, விடியற்காலையில் வனப் பகுதிக்குள் சென்றது. அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறும் முன் இந்தக் கரடியை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று வனத் துறைக்கு  மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.