/
கோத்தகிரியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரைக் கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் காரில் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கோத்தகிரி உதவி ஆய்வாளா் பிரசாந்த், காவலா்கள் வாகனத் தணிக்கையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, பஜாா் பகுதியில் வந்த காரில் இருந்து 345 புகையிலை பாக்கெட்டுகள், 7 கிலோ குட்கா ஆகியன கைப்பற்றப்பட்டன. இது தொடா்பாக கன்னிகாதேவி காலனியை சோ்ந்த பெருமாள் (33), விசாவு (33) ஆகிய இருவரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.







