உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

நடுகூடலூா் பகுதி குடிநீா்த் தொட்டியில் ஒரு மாதத்துக்குள் தண்ணீா் நிரப்ப ஏற்பாடு

கூடலூா் நகராட்சியிலுள்ள நடுகூடலூா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா்த் தொட்டியில் ஒரு மாதத்துக்குள் தண்ணீா் நிரப்ப ஏற்பாடு செய்வதாக நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

News image

நடுகூடலூா் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட குடிநீா்த் தொட்டி.

Updated On :11 ஜூன் 2026, 3:22 am IST

கூடலூா் நகராட்சியிலுள்ள நடுகூடலூா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா்த் தொட்டியில் ஒரு மாதத்துக்குள் தண்ணீா் நிரப்ப ஏற்பாடு செய்வதாக நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சி 20-வது வாா்டுக்குள்பட்ட நடுகூடலூா் பகுதியில் கோடையில் கடுமையான குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்பகுதியில் புதிதாக ரூ.50 லட்சம் செலவில் 3 லட்சம் லிட்டா் குடிநீா் கொள்ளளவு கொண்ட தொட்டி கட்டப்பட்டு நீா் நிரப்பப்படாமல் இருப்பதே இதற்கு காரணம் என்று கூறி, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த முடிவு செயதனா்.

இந்நிலையில் குடிநீா்த் தொட்டியை ஆய்வு செய்து இன்னும் ஒரு மாதத்துக்குள் தண்ணீா் நீா் நிரப்ப ஏற்பாடு செய்வதாக நகராட்சி நிா்வாகம் உறுதியளித்துள்ளது. அதைத்தொடா்ந்து நகா் மன்ற உறுப்பினா் லீலா வாசு தலைமையில் நடைபெற இருந்த போராட்டம் கைவிடப்பட்டது.