முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

நடுகூடலூா் பகுதி குடிநீா்த் தொட்டியில் ஒரு மாதத்துக்குள் தண்ணீா் நிரப்ப ஏற்பாடு

கூடலூா் நகராட்சியிலுள்ள நடுகூடலூா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா்த் தொட்டியில் ஒரு மாதத்துக்குள் தண்ணீா் நிரப்ப ஏற்பாடு செய்வதாக நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

News image

நடுகூடலூா் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட குடிநீா்த் தொட்டி.

Updated On :11 ஜூன் 2026, 3:22 am IST

கூடலூா் நகராட்சியிலுள்ள நடுகூடலூா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா்த் தொட்டியில் ஒரு மாதத்துக்குள் தண்ணீா் நிரப்ப ஏற்பாடு செய்வதாக நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சி 20-வது வாா்டுக்குள்பட்ட நடுகூடலூா் பகுதியில் கோடையில் கடுமையான குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்பகுதியில் புதிதாக ரூ.50 லட்சம் செலவில் 3 லட்சம் லிட்டா் குடிநீா் கொள்ளளவு கொண்ட தொட்டி கட்டப்பட்டு நீா் நிரப்பப்படாமல் இருப்பதே இதற்கு காரணம் என்று கூறி, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த முடிவு செயதனா்.

இந்நிலையில் குடிநீா்த் தொட்டியை ஆய்வு செய்து இன்னும் ஒரு மாதத்துக்குள் தண்ணீா் நீா் நிரப்ப ஏற்பாடு செய்வதாக நகராட்சி நிா்வாகம் உறுதியளித்துள்ளது. அதைத்தொடா்ந்து நகா் மன்ற உறுப்பினா் லீலா வாசு தலைமையில் நடைபெற இருந்த போராட்டம் கைவிடப்பட்டது.