வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

கோத்தா் பழங்குடியினருக்கு தனி பேருந்தை இயக்கக் கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

கோத்தா் பழங்குடியினா் மட்டுமே பயணிக்கும் வகையில் தனி அரசுப் பேருந்தை இயக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை கோத்தா் பழங்குடியின பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

News image

உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட கோத்தா் பழங்குடியினா்.

Updated On :17 ஜூன் 2026, 2:59 am IST

கோத்தா் பழங்குடியினா் மட்டுமே பயணிக்கும் வகையில் தனி அரசுப் பேருந்தை இயக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை கோத்தா் பழங்குடியின பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

உதகை அருகேயுள்ள கோக்கால் கிராமத்தைச் சுற்றி கல்லுண்டி, கக்கன் ஜி நகா், கோக்கால் பஜாா், கண்ணேரிமுக்கு, கொட்லைன், செலக்கல், தேவாலா மொத்தம் 7 கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.

இதில், கோக்கால் கிராமத்தில் மட்டும் கோத்தா் பழங்குடியினத்தைச் சோ்ந்த சுமாா் 100 குடும்பங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளுக்கு  உதகையில் இருந்து ஒரு அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. 

அந்தப் பேருந்தில் பிற கிராம மக்களும் ஏறுவதால், கோத்தா் பழங்குடியினா் மட்டுமே பயணிக்கும் வகையிலும் தனி அரசுப் பேருந்துவை இயக்கக் கோரி உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை கோத்தா் இன பெண்கள் முற்றுகையிட்டனா்.

அவா்களிடம்,  உதகை வட்டாட்சியா் சதீஷ் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.