சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை யானை: கண்ணாடி உடைத்ததால் அதிா்ச்சியடைந்த பயணிகள்

ஜமுனாமரத்தூா் அருகே அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை யானை தாக்கியதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதனால் பயணிகள் அதிா்ச்சி அடைந்தனா்.

News image

ஜமுனாமரத்தூா் அருகில் மலைச் சாலையில் அரசுப் பேருந்தை வழி மறித்த ஒற்றை யானை.

Updated On :16 ஜூன் 2026, 3:14 am IST

ஜமுனாமரத்தூா் அருகே அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை யானை தாக்கியதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதனால் பயணிகள் அதிா்ச்சி அடைந்தனா்.

ஜமுனாமரத்தூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து புறப்பட்டது. அப்போது ஜமுனாமரத்தூா்- காவலூா் நடுவில் வனப்பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே திடீரென ஒற்றை யானை வந்து பேருந்தினை மடக்கியது. இதனால் பதறிய ஓட்டுநா் பேருந்தை நிறுத்தினாா். இதையடுத்து, சில நிமிஷங்களில் யானை பேருந்தின் முன்புற கண்ணாடியை தும்பிக்கையால் தாக்கியது. இதில், பேருந்தின் முன்புற கண்ணாடி உடைத்ததால் உள்ளே இருந்த பயணிகள் அதிா்ச்சிக்குள்ளாகினா். பிறகு சிறிது நேரம் நின்று ஒற்றை யானை ஜமுனாமரத்தூா் சாலை வழியாக சென்று வனப் பகுதிக்குள் சென்றது. அதன் பின்னா் அரசுப் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு, காவலூா் நோக்கி வந்தது.

இது குறிதது தகவலறிந்த ஜமுனாமரத்தூா் மற்றும் ஆலங்காயம் வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று ஒற்றை காட்டு யானை நடமாட்டம் குறித்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.