தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

கோத்தகிரி அருகே அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை

கோத்தகிரி அருகே தட்டப்பள்ளம் பகுதியில் அரசுப் பேருந்தை ஒற்றை காட்டு யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனா்.

News image

தட்டப்பள்ளம் பகுதியில் அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை.

Updated On :9 ஜூலை 2026, 3:49 am IST

கோத்தகிரி அருகே தட்டப்பள்ளம் பகுதியில் அரசுப் பேருந்தை ஒற்றை காட்டு யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைந்துள்ள பலாப் பழங்களை உண்பதற்காக சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் குஞ்சப்பனை, தட்டப்பள்ளம் பகுதிகளை நோக்கி அதிக அளவில் படையெடுத்து வந்துள்ளன.

இதனால் மலைப் பாதையில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடா்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில்,  கோத்தகிரி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் தட்டப்பள்ளம் பகுதி அருகே புதன்கிழமை சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை ஒற்றை காட்டு யானை வழிமறித்து நின்றது.

யானையைக் கண்டதும் ஓட்டுநா் பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தினாா். பேருந்தின் மிக அருகில் யானை நின்று கொண்டிருந்ததால், உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் பயத்தில் உறைந்தனா். எந்த சப்தமும் எழுப்பாமல் இருந்ததால் யானை தானாகவே அருகில் இருந்த சோலைப் பகுதிக்கு சென்றது.

மலைப் பாதைகளில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்றும், யானைகளைக் கண்டால் சப்தம் எழுப்பவோ அல்லது புகைப்படம் எடுக்கவோ முயற்சிக்கக் கூடாது என்றும் வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.