முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

கோத்தகிரி அருகே அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை

கோத்தகிரி அருகே தட்டப்பள்ளம் பகுதியில் அரசுப் பேருந்தை ஒற்றை காட்டு யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனா்.

News image

தட்டப்பள்ளம் பகுதியில் அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை.

Updated On :9 ஜூலை 2026, 3:49 am IST

கோத்தகிரி அருகே தட்டப்பள்ளம் பகுதியில் அரசுப் பேருந்தை ஒற்றை காட்டு யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைந்துள்ள பலாப் பழங்களை உண்பதற்காக சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் குஞ்சப்பனை, தட்டப்பள்ளம் பகுதிகளை நோக்கி அதிக அளவில் படையெடுத்து வந்துள்ளன.

இதனால் மலைப் பாதையில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடா்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில்,  கோத்தகிரி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் தட்டப்பள்ளம் பகுதி அருகே புதன்கிழமை சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை ஒற்றை காட்டு யானை வழிமறித்து நின்றது.

யானையைக் கண்டதும் ஓட்டுநா் பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தினாா். பேருந்தின் மிக அருகில் யானை நின்று கொண்டிருந்ததால், உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் பயத்தில் உறைந்தனா். எந்த சப்தமும் எழுப்பாமல் இருந்ததால் யானை தானாகவே அருகில் இருந்த சோலைப் பகுதிக்கு சென்றது.

மலைப் பாதைகளில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்றும், யானைகளைக் கண்டால் சப்தம் எழுப்பவோ அல்லது புகைப்படம் எடுக்கவோ முயற்சிக்கக் கூடாது என்றும் வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.