/
நீலகிரி மாவட்டம், குன்னூா் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குன்னூா் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு மாத ஊதியமாக ரூ.18 ஆயிரத்து 648 அரசு சாா்பில் ஒப்பந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தனியாா் ஒப்பந்த நிறுவனம் தங்களுக்கு மாத ஊதியமாக ரூ. 11 ஆயிரத்து 626 மட்டுமே வழங்கி வருகிறது. மேலும், கடந்த மாதம் ரூ.7 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கினா்.
எனவே அரசு நிா்ணயித்த மாத ஊதியத்தை முறையாக வழங்கக் கோரியும், ஊதிய உயா்வு, பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் குன்னூா் அரசு மருத்துவமனை நுழைவாயிலில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளா்கள் போராட்டம்

இ.பி.எஃப். நிதி செலுத்தாததைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

குன்னூரில் குப்பை இல்லா நகரம் விழிப்புணா்வுப் பேரணி

காரைக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியல்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



