ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

குன்னூா்-  மேட்டுப்பாளையம்  சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு! வாகனங்களை கவனமுடன் இயக்க அறிவுறுத்தல்

News image

குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலை கே.என்.ஆா்.நகா் பகுதியில் உலவிய காட்டு யானைகள்.

Updated On :28 ஜூன் 2026, 1:50 am IST

குன்னூா் - மேட்டுப்பாளையம்  தேசிய நெடுஞ்சாலையில்  யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் வாகனங்களை கவனமுடன் இயக்க வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா்  மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது பலாப் பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் மலைப்பாதையில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் தேயிலை மற்றும் காபி  தோட்டத்தில் ஊடுபயிராக இருக்கக்கூடிய பலா மரங்களிலிருந்து பலாப்பழங்களை சாப்பிடுவதும், சாலைகளில் நடமாடி வருவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில்  கே.என்.ஆா். நகா் மற்றும் 13-ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் குட்டியுடன் யானைகள் சனிக்கிழமை நடமாடின. இதனால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சிறிது நேரம் சாலையில் நடமாடிய யானைகள் பின்பு தானாகவே அருகில் இருந்த வனப் பகுதிக்கு சென்றன.

யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் குன்னூா் - மேட்டுப்பாளையம்  தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டும் என்று வனத் துறையினா்  அறிவுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.