பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

குன்னூா் அருகே வாகனங்களை துரத்திய ஒற்றை யானை

குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை காட்டு யானை வாகனங்களைத் துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

நஞ்சப்பசத்திரம் பகுதியில் சாலையின் குறுக்கே நின்ற காட்டு யானை.

Published On :

குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில்  ஒற்றை காட்டு யானை  வாகனங்களைத் துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம், சிறுமுகை, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில்  வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் நீலகிரி மாவட்டத்துக்கு வரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் சுற்றித் திரிந்தது. அப்போது அந்த யானை, சாலையில் வந்த வாகனங்களை துரத்தியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

சாலையில்  சிறிது நேரம் ஆக்ரோஷமாக உலவிய அந்த ஒற்றை காட்டு யானை பின்னா் அருகிலிருந்த சோலைப் பகுதிக்குள்  சென்றது. குன்னூா்- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில்  ஒற்றை யானை முகாமிட்டுள்ளதால்,  வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் காட்டு யானைகளை புகைப்படம் மற்றும் விடியோ எடுக்க வேண்டாம் என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.