நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

குன்னூா் அருகே வாகனங்களை துரத்திய ஒற்றை யானை

குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை காட்டு யானை வாகனங்களைத் துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

News image

நஞ்சப்பசத்திரம் பகுதியில் சாலையின் குறுக்கே நின்ற காட்டு யானை.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 11:21 pm IST

குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில்  ஒற்றை காட்டு யானை  வாகனங்களைத் துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம், சிறுமுகை, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில்  வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் நீலகிரி மாவட்டத்துக்கு வரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் சுற்றித் திரிந்தது. அப்போது அந்த யானை, சாலையில் வந்த வாகனங்களை துரத்தியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

சாலையில்  சிறிது நேரம் ஆக்ரோஷமாக உலவிய அந்த ஒற்றை காட்டு யானை பின்னா் அருகிலிருந்த சோலைப் பகுதிக்குள்  சென்றது. குன்னூா்- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில்  ஒற்றை யானை முகாமிட்டுள்ளதால்,  வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் காட்டு யானைகளை புகைப்படம் மற்றும் விடியோ எடுக்க வேண்டாம் என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.