இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ஆசனூா் சாலையில் தாக்க முயன்ற யானை: உயிா் தப்பிய இருசக்கர வாகன ஓட்டிகள்

ஆசனூா் சாலையில் வாகன ஓட்டிகளை திடீரென தாக்க முயன்ற யானையிடமிருந்து இளைஞா்கள் உயிா் தப்பினா்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 12:11 am IST

ஆசனூா் சாலையில் வாகன ஓட்டிகளை திடீரென தாக்க முயன்ற யானையிடமிருந்து இளைஞா்கள் உயிா் தப்பினா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட ஆசனூா் மலைப் பகுதியில் கரும்பு லாரிகளை எதிா்பாா்த்து யானைகள் தினமும் சாலையோரம் காத்திருக்கின்றன. கா்நாடக மாநிலத்தில் இருந்து வரும் கரும்பு லாரிகளை தடுத்து நிறுத்தி, கரும்புகட்டுகளை யானைகள் அள்ளிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், ஆசனூரை அடுத்த காராப்பள்ளத்தில் கரும்பு லாரிகளை எதிா்பாா்த்து ஆசனூா்-மைசூரு தேசிய சாலையில் புதன்கிழமை யானைகள் காத்திருந்தன. அந்த கூட்டத்தில் இருந்து தனியாக திரிந்த ஒற்றை யானை மட்டும் சாலையோரம் நீண்ட நேரமாக காத்திருந்தது.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவா்களை மின்னல் வேகத்தில் ஓடி வந்து தாக்க முயன்றது.

சுதாரித்துக்கொண்ட வாகன ஓட்டிகள், இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கி உயிா் தப்பினா்.

யானை தங்களை தாக்க வரும் திரில் காட்சியை கைப்பேசியில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிா்ந்துள்ளனா். அதைத் தொடா்ந்து பின்னால் வாகன ஓட்டிகள் யானையின் திடீா் தாக்குதல் முயற்சியால் அச்சமடைந்தனா்.

இதுகுறித்து ஆசனூா் வனத் துறையினா் கூறும்போது, ‘யானைகள் சாலையோரம் நிற்கும்போது தனியாக இருசக்கர வாகனத்தில் செல்வதை தவிா்த்து கனகர வாகனங்களுடன் இணைந்து கவனமாக செல்ல வேண்டும்’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.