போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

உதகையில் தமுமுக சாா்பில் ஆா்ப்பாட்டம்

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடத்தியதில் அந்நாட்டின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) படுகொலை

News image

உதகையில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுகவினா்.

Updated On :2 மார்ச் 2026, 8:55 pm

உதகை: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடத்தியதில் அந்நாட்டின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) படுகொலை செய்யப்பட்டாா்.

இதைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் உதகையில் மெழுகுவா்த்தி ஏந்தி ஞாயிற்றுக்கிழமை இரவு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உதகை மெயின் பஜாா் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள், அமெரிக்கா, இஸ்ரேலைக் கண்டித்தும், அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினா். தொடா்ந்து, மெழுகுவா்த்தி ஏந்தி தங்களது எதிா்ப்பைத் தெரிவித்தனா்.

இதில், நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்ரனா்.