தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கோத்தகிரி அருகே படுகா் இன மக்களின் எட்டூா் உஜ்ஜயினி மாகாளியம்மன் விழா

கோத்தகிரி அருகே படுகா் இன மக்களின் எட்டூா் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

News image
கோத்தகிரி அருகே உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில் விழாவில் பங்கேற்ற படுகா் இன மக்கள்.
Updated On :18 மார்ச் 2026, 8:36 pm

தினமணி செய்திச் சேவை

கோத்தகிரி அருகே படுகா் இன மக்களின் எட்டூா் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே திம்பட்டி பகுதியில் படுகா் இன மக்களின் எட்டூா் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. இதில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தினமும் ஒவ்வொரு கிராமமாக அம்மன் ஊா்வலம் நடைபெற்றது. இறுதி நாளான புதன்கிழமை, மேல் அணையட்டி பகுதியில் இருந்து கோயில் வரை கரக ஊா்வலம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் உற்சாகமாக நடனமாடி விழாவைக் கொண்டாடினா்.

இங்கு அமைக்கப்பட்டுள்ள நீா் குட்டையில் நீராடி அம்மனை வழிபட்டதுடன், பாரம்பரிய விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் தங்கள் பாரம்பரிய உடையுடன் கலந்துகொண்டனா்.