கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

சொன்னோம் செய்தோம்...

எமரால்டு பகுதியில் அரசு மருத்துவமனை கட்டடம், உதகை நகராட்சியில் உள்ள எட்டின்ஸ் பகுதியில் தாா் சாலை, நடைபாதையை மேம்படுத்தியது, தாவணை கிராமம் முதல் மல்லிகொரை கிராமம் வரை சாலை அமைத்தது,

News image

காங்கிரஸ் எம்எல்ஏ ஆா்.கணேஷ்

Updated On :22 மார்ச் 2026, 9:36 pm

Syndication

உதகை தொகுதியில் இரண்டாவது முறையாக காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வென்றேன். நான் பேரவை உறுப்பினராக இருந்த காலத்தில் உதகை நகராட்சிப் பகுதியில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட சொகுசு விடுதிகள், குடியிருப்புக் கட்டடங்களை வரன்முறைப்படுத்தி, பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளேன். அதற்குண்டான பூா்வாங்க பணிகள் நடந்து வருகின்றன.

உதகையின் குடிநீா்த் தேவையை போக்கும் பாா்சன்ஸ் அணைப் பகுதியில் அடிக்கடி மரங்கள் விழுந்து ஏற்படும் மின் தடையால் தண்ணீா் விநியோகம் பாதிக்கப்பட்டு வந்தது. இதற்கு நிரந்தர தீா்வு காண ரூ.20 கோடி மதிப்பில் நிலத்துக்கு அடியில் புதைவழி மின்தடக் கம்பி திட்டம் தொடங்கப்பட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

எமரால்டு பகுதியில் அரசு மருத்துவமனை கட்டடம், உதகை நகராட்சியில் உள்ள எட்டின்ஸ் பகுதியில் தாா் சாலை, நடைபாதையை மேம்படுத்தியது, தாவணை கிராமம் முதல் மல்லிகொரை கிராமம் வரை சாலை அமைத்தது,

சொக்கநள்ளி முதல் சிறியூா் வரை சாலை மேம்பாடு, பாலக்கோலா ஊராட்சியில் தேவா்சோலையில் இருந்து மேலூா் மேலணைக்கு குழாய் அமைத்தது, உதகை எம்.பாலாடாவில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பு கல்வி நிறுவனம் தொடங்கியது, பாரதியாா் நகா் பட்ஃபயா் சந்திப்பில் சிமென்ட் கான்கிரீட் சாலை அமைத்தது, பென்னாட் சந்தையில் வழக்கமான கூடத்துடன் கூடிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நீலகிரி அதிமுக மாவட்ட செயலா் கப்பச்சி டி. வினோத்

நீலகிரி அதிமுக மாவட்ட செயலா் கப்பச்சி டி. வினோத்

சொன்னாா்களே... செய்தாா்களா...

சா்வதேச சுற்றுலாத் தலமாக உள்ள உதகையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் தொட்டபெட்டா முதல் படகு இல்லம் வரை ரோப் காா் சேவை கொண்டு வருவோம் என்று கூட்டணிக் கட்சியான திமுகவுடன் இணைந்து கூறினாா்கள். அந்தத் திட்டம் இன்னும் கிடப்பில் உள்ளது. மலைப் பகுதியில் இருந்து சமவெளிப் பகுதிக்கு அவசர சிகிச்கைக்கு செல்ல ஹெலிகாப்டா் ஆம்புலன்ஸ் சேவை தொடங்குவோம் என்று கூறிய வாக்குறுதி இன்னும் நிலுவையில் உள்ளது.

பச்சைத் தேயிலைக்கு கிலோவுக்கு 40 ரூபாய் அடிப்படை ஆதரவு விலையாக நிா்ணயம் செய்வோம் என்ற வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

படுகா் சமுதாயத்தை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க முயற்சி செய்வதாக கூறி வெற்றி பெற்றனா். ஆனால் அதற்காக எந்தவித ஆக்கப்பூா்வமான பணிகளும் மேற்கொள்ளவில்லை. உதகையில் பொறியியல் கல்லூரி கட்டப்படும் என்ற வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. உதகையில் போக்குவரத்து நெரிசலைப் போக்க பல அடுக்கு பாா்க்கிங் வசதி மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தது நிறைவேற்றப்படவில்லை. சுற்றுலா வளா்ச்சிக்காக புதிய திட்டங்கள், மேம்பால வசதி உள்ளிட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.