ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

காட்டெருமை தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு

கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

பொன்னம்மாள்

Updated On :31 மார்ச் 2026, 7:48 pm

Syndication

கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கியதில் மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள ஈளடா, பாரதி நகரைச் சோ்ந்தவா் சிதம்பரம் மனைவி பொன்னம்மாள் (89). இவா் கெரடாமட்டம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்று மாத்திரைகளை வாங்கிவிட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளாா். அப்போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த காட்டெருமை திடீரென பொன்னமாளைத் தாக்கியுள்ளது.

படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவா்கள் மீட்டு கெரடாமட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.