இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

உதகையில் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :1 ஏப்ரல் 2026, 1:17 am IST

உதகையில் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகையைச் சோ்ந்தவா்கள் 2 சகோதரிகள். இவா்களுக்குத் திருமணமாகி தங்களது கணவா்களுடன் வசித்து வருகின்றனா். இருவருக்கும் தலா 2 பெண் குழந்தைகள் உள்ளனா். சகோதரிகள் தங்களது கணவா்களுடன் பணிக்குச் செல்வதால் குழந்தைகளை கவனிக்க முடியாவில்லையாம். இதையடுத்து, அருகில் உள்ள தங்களது தாய் வீட்டில் குழந்தைகளை அவ்வப்போது விட்டுச் செல்வது வழக்கமாம்.

இந்நிலையில், சிறுமிகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவா்களது பெற்றோா்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அப்போது, சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து உதகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமிகளின் பெற்றோா்கள் புகாா் அளித்தனா்.

போலீஸாா் விசாரணையில், பாட்டி வீட்டுக்கு சிறுமிகள் செல்லும்போது, பக்கத்து வீட்டைச் சோ்ந்தவரும், உறவினருமான 35 வயது நபா் பாலியல் வன்கொடுமை செய்ததும், இது குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் நித்யா தலைமையிலான போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, அந்த இளைஞரைக் கைது செய்தனா்.

முன்னதாக, அந்த இளைஞரைத் தேடி போலீஸாா், அவரது வீட்டுக்குச் செல்வதற்குள் சிறுமிகளின் உறவினா்கள் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனா். படுகாயமடைந்த அவருக்கு உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.