பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

மாணவி பாலியல் வன்கொடுமை: இளைஞா் போக்ஸோவில் கைது

தருமபுரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் போக்ஸோவில் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 5:37 am IST

தருமபுரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.

தருமபுரியை அடுத்த நாகா்கோயிலைச் சோ்ந்தவா் அருண்குமாா் (30). இவா் பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதனால் மாணவி கா்ப்பமடைந்தாா். இதுகுறித்து மாணவியின் தாய், பாட்டிக்கு தெரியவந்தது. இந்த நிலையில் மாணவி, அவரது தாய், பாட்டி மூவரும் எலி மருந்து சாப்பிவிட்டு தருமபுரி அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதியில் மயங்கிக் கிடந்தனா்.

இதைக் கண்ட அவரது உறவினா், மூவரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தாா். மருத்துவமனையில் மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து அருண்குமாரை போக்ஸோவில் கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.