தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

உதகையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

News image

கொடி அணிவகுப்பில் பங்கேற்றோா்.

Updated On :3 மே 2026, 7:27 pm

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, உதகையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், வாக்கு எண்ணிக்கை அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறும் வகையிலும் போலீஸாா் கொடி அணிவகுப்பில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கூடலூா் ஆகிய 3 தொகுதிகளுக்கான பேரவைத் தோ்தல் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிலையில், உதகை லாலி இன்ஸ்டிடியூட் முதல் பேருந்து நிலையம் வரை கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில், போலீஸாா், மத்திய பாதுகாப்புப் படையினா் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.