பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

பந்தலூா் அருகே வாகனம் மோதி 2 சிறுத்தை குட்டிகள் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்துள்ள ரிச்மண்ட் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தாயுடன் சாலையைக் கடக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரண்டு சிறுத்தை குட்டிகள் உயிரிழந்தன.

News image

வாகனம் மோதி உயிரிழந்த சிறுத்தை குட்டி.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்துள்ள ரிச்மண்ட் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தாயுடன் சாலையைக் கடக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரண்டு சிறுத்தை குட்டிகள் உயிரிழந்தன.

கூடலூா் வனக்கோட்டம், பந்தலூா் வனச் சரகத்திலுள்ள தேவாலா-பந்தலூா் சாலையில் ரிச்மண்ட் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தாயுடன் சாலையைக் கடக்கும்போது இரண்டு சிறுத்தை குட்டிகள் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

தகவலறிந்து வந்த பந்தலூா் வனச் சரக அலுவலா் சஞ்சீவி சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து உடற்கூறாய்வு செய்த பின்னா் சிறுத்தை குட்டிகளின் உடலை எரியூட்டினா்.

இறந்த சிறுத்தை குட்டிகள் பிறந்து ஐந்து மாதங்களே ஆன ஆண், பெண் குட்டிகள் என்று வனத் துறையினா் தெரிவித்தனா். இது குறித்து வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.