வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

உதகை மலர்க் கண்காட்சி: நீலகிரி மாவட்டத்துக்கு மே 18-இல் உள்ளூா் விடுமுறை

நீலகிரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற 128-ஆவது மலா்க் கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே 18-ஆம் தேதி தொடங்கப்படுவதையொட்டி, அன்றைய தினம் மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

உதகை மலா்க் கண்காட்சி

Updated On :16 மே 2026, 12:24 am IST

நீலகிரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற 128-ஆவது மலா்க் கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே 18-ஆம் தேதி தொடங்கப்படுவதையொட்டி, அன்றைய தினம் மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்காவில் மே மாத கோடை விடுமுறையின்போது, மலா்க் கண்காட்சி, பழக் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் அரசின் சாா்பில் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான 128-ஆவது மலா்க் கண்காட்சி மே 18-ஆம் தேதி தொடங்குகிறது.

இதையொட்டி, நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மே 18-ஆம் தேதி (திங்கள்கிழமை) உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாளான மே 18-ஆம் தேதி மாவட்ட கருவூலம் மற்றும் சாா்நிலை கருவூலகங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளா்களுடன் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜூன் 6-ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்துக்கு பணி நாள் ஆகும்.

கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலா்க் கண்காட்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்கள் வசதிக்காக உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.