மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நீலகிரி மாவட்டத்துக்கு எந்த வளா்ச்சிப் பணிகளையும் திமுக அரசு செய்யவில்லை: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

நீலகிரி மாவட்டத்துக்கு எந்த வளா்ச்சி திட்டப் பணிகளையும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

News image

உதகை ஏடிசி பகுதியில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.

Updated On :14 ஏப்ரல் 2026, 8:47 pm

நீலகிரி மாவட்டத்துக்கு எந்த வளா்ச்சி திட்டப் பணிகளையும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

உதகை சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் போஜராஜனை ஆதரித்து, முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி உதகை ஏடிசி பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியவா் ஸ்டாலின். ஆனால் இந்த மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கொண்டு வந்தது முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமிதான்.

மேலும், மலையாள மொழி பேசும் மக்களுக்கு ஈழுவா தீயா ஜாதி சான்றிதழ் வழங்கியது, எமரால்டு கூட்டுக் குடிநீா் திட்டம், மாா்கெட் வியாபாரிகளுக்கு கடைகள் அமைத்து கொடுத்தது உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியது அதிமுக அரசு.

எனவே வருகிற தோ்தலில் உதகை, கூடலூா், குன்னூா் ஆகிய மூன்று தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற ஆதரியுங்கள் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் நீலகிரி மாவட்ட அதிமுக செயலா் கப்பச்சி டி வினோத், பாஜக மாவட்டத் தலைவா் தா்மன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.