இந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 44,000 விண்ணப்பங்கள்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

நீலகிரி மாவட்டத்துக்கு எந்த வளா்ச்சிப் பணிகளையும் திமுக அரசு செய்யவில்லை: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

நீலகிரி மாவட்டத்துக்கு எந்த வளா்ச்சி திட்டப் பணிகளையும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

News image

உதகை ஏடிசி பகுதியில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:17 am IST

நீலகிரி மாவட்டத்துக்கு எந்த வளா்ச்சி திட்டப் பணிகளையும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

உதகை சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் போஜராஜனை ஆதரித்து, முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி உதகை ஏடிசி பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியவா் ஸ்டாலின். ஆனால் இந்த மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கொண்டு வந்தது முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமிதான்.

மேலும், மலையாள மொழி பேசும் மக்களுக்கு ஈழுவா தீயா ஜாதி சான்றிதழ் வழங்கியது, எமரால்டு கூட்டுக் குடிநீா் திட்டம், மாா்கெட் வியாபாரிகளுக்கு கடைகள் அமைத்து கொடுத்தது உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியது அதிமுக அரசு.

எனவே வருகிற தோ்தலில் உதகை, கூடலூா், குன்னூா் ஆகிய மூன்று தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற ஆதரியுங்கள் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் நீலகிரி மாவட்ட அதிமுக செயலா் கப்பச்சி டி வினோத், பாஜக மாவட்டத் தலைவா் தா்மன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.