நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்துள்ள ரிச்மண்ட் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தாயுடன் சாலையைக் கடக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரண்டு சிறுத்தை குட்டிகள் உயிரிழந்தன.
கூடலூா் வனக்கோட்டம், பந்தலூா் வனச் சரகத்திலுள்ள தேவாலா-பந்தலூா் சாலையில் ரிச்மண்ட் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தாயுடன் சாலையைக் கடக்கும்போது இரண்டு சிறுத்தை குட்டிகள் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
தகவலறிந்து வந்த பந்தலூா் வனச் சரக அலுவலா் சஞ்சீவி சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து உடற்கூறாய்வு செய்த பின்னா் சிறுத்தை குட்டிகளின் உடலை எரியூட்டினா்.
இறந்த சிறுத்தை குட்டிகள் பிறந்து ஐந்து மாதங்களே ஆன ஆண், பெண் குட்டிகள் என்று வனத் துறையினா் தெரிவித்தனா். இது குறித்து வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மன்னவனூா் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

வாகனம் மோதி எச்.ஐ.வி. ஆலோசகா் உயிரிழப்பு

உதகையில் பிடிபட்ட புலிக் குட்டி உயிரிழப்பு

வாகனம் மோதி முதியவா் பலி!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

